ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கந்து வட்டி பிரச்னையால் இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரரும், தயாரிப்பாளரருமான ஜிவி, கடந்த 2003-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த தற்கொலைக்கு காரணமாக இருந்தவரின் பெயர் மதுரை அன்புச் செழியன். இப்போது தயாரிப்பாளர் அசோக் குமாரின் மரத்திற்கும் இவர் தான் காரணமாகியிருக்கிறார்.
இதனால் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தமிழ் சினிமாவில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அது நடக்குமா... நடக்காதா என்பது வேறு விஷயம். ஆனால் இப்போது பலரும் அவரைப்பற்றி பல்வேறு திடுக்கிடும் விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் சுசீந்திரன், அன்புவால் நடிகர் அஜித்தும் பாதிக்கப்படார் என பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
அசோக்கின் மரணம் தமிழ் சினிவால் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து கொள்கிறேன். "நான் கடவுள் நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித், அசோக்கின் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.
இயக்குநர்கள் லிங்குசாமி, கெளதம்மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச் செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இமான் இசையமைப்பாளரிடமும் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்பு செழியன் தண்டிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும் வருவாய்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிபனம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு நடத்தவும்.
இவ்வாறு சுசீந்திரன் கூறியுள்ளார்.