மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமாக கம்பெனி புரொடக்ஷ்ன் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார், சசிகுமாரின் அத்தை மகன். 45 வயதான அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்தார். தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருக்கிறார் அசோக் குமார். இது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கு பதிவு
அசோக் குமார் தற்கொலையால், சசிகுமார் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கடன் கேட்டு மிரட்டல், தற்கொலைக்ககு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பைனான்சியர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேதனை தருகிறது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், தனது மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்றார்.
சினிமாவை விட்டு வெளியேறும் நிலை
தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், சினிமாவில் தான் எல்லோரும் வீர வசனம் பேசுகின்றனர். பிரச்னை குறித்து யார் வெளியே சொல்கிறார்கள். அனைத்து சங்கமும் ஒன்று சேர்ந்து கந்து வட்டியை வசூலிக்கும் பிரச்னைக்கு முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் சினிமாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். சினிமா தயாரிப்பாளர் சங்கமும், வினியோகஸ்தர் சங்கமும் பேசி முடிவுஎடுக்க வேண்டும் என கூறினார்.
அன்புச்செழியன் தலைமறைவு
தன் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பைனான்சியர் அன்புச் செழியன் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அசோக்குமாரின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புக்களை ஆய்வு செய்யவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.