‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தீவிரமான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலம் கூறிவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதிலும் மும்முரமாக இருக்கிறார். ஆளும் கட்சியின் ஊழலையும், மத்திய அரசின் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்து எழுதி வருகிறார்.
மாநில அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாநில அமைச்சர்கள். "கமல் பொதுப்படையாக ஊழல் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. ஊழல் நடந்திருந்தால் அதை ஆதாரத்துடன் வெளியிட்டு குற்றம் சாட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் நேற்று கமல் தனது டுவிட்டர் மூலம் முதல் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தன்னை பாரதியாராக சித்திரித்து அந்த தோற்றத்தில் ஊழலுக்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். சென்னை மந்தவெளி பகுதியில் சாலை போடுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் 35 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதை கமலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கத்தினர் கண்டுபிடித்து அதனை வீடியோ ஆதாரமாக வெளியிட்டனர்.
அந்த ஆதாரங்களை வெளியிட்டு கமல் தனது டுவிட்டரில், "அறப்போர் இயக்க சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும். என்னை கேள்வியும், ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில், மேலும் தொடருமாம் இதுபோன்ற ஆதாரங்கள்" என்ற எழுதியிருக்கிறார்.