டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்றுத் தருவது போலீஸ் கதைகள் தான். அந்த கதாபாத்திரங்களில் நடித்த பிறகு தான் அவர்களுக்கு ஆக்ஷ்ன் ஹீரோ என்ற இமேஜ் அதிகமாகப் பொருந்துகிறது.
ரஜினிகாந்துக்கு 'மூன்று முகம்', கமல்ஹாசனுக்கு 'காக்கிச் சட்டை' என அப்போதைய நடிகர்களுக்கும், இப்போதைய நடிகர்களில் விஜய்க்கு 'போக்கிரி', அஜித்துக்கு 'மங்காத்தா', விக்ரமுக்கு 'சாமி', சூர்யாவுக்கு 'சிங்கம்' எனவும் சொல்லலாம். கார்த்திக்கு 'சிறுத்தை' பட ரத்தினவேல் பாண்டியன் என்ற போலீஸ் கதாபாத்திரம் அவருக்குப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.
அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தி டிஎஸ்பி அதிகாரியாக நடித்து இன்று வெளிவந்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் அவருடைய நடிப்பை நேற்று நடந்த பிரிமீயர் காட்சியில் பல திரைப் பிரபலங்கள் பாராட்டியுள்ளார்கள். போலீஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை விட அவரது தம்பி கார்த்தி பொருத்தமாக இருப்பதாகப் பலரும் கூறியுள்ளார்கள். அவ்வளவு ஏன், அண்ணன் சூர்யாவே, தம்பி கார்த்தியின் நடிப்பை மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
'சிங்கம்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சிங்கம் 2, சி 3 என வந்தது போல 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வரும் எனத் தெரிகிறது.