‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய படம் நெஞ்சில் துணிவிருந்தால். சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, மெஹ்ரின் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 10ந் தேதி வெளிவந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் இயக்குனர் சுசீந்திரன் படத்தில் ஹீரோயின் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட 20 நிமிட காட்சிகளை நீக்கினார். அப்படியிருந்தும் படம் மக்களை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் படத்தை இன்று (17ந் தேதி) முதல் படத்தை தியேட்டரிலிருந்து வாபஸ் பெற்று மேலும் பல திருத்தங்கள் செய்து வருகிற டிசம்பர் 15ந் தேதி மீண்டும் வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:
நவம்பர் 10-ம் தேதி நெஞ்சில் துணிவிருந்தால் வெளியானது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், இப்படத்தை மறுவெளியீட்டுக்கு திட்டமிடுகிறோம். டிசம்பர் 15-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். இப்படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து விமர்சித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சித்தவர்களுக்கும் நன்றி. தவிர்க்க முடியாத காரணத்தால் நாளை(இன்று - நவம்பர் 17) முதல் தமிழகத்தில் எந்ததொரு திரையரங்குகளிலும் நெஞ்சில் துணிவிருந்தால் திரையிடப்படாது. டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் வெளியாகும்.
இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.