'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தால் தான், ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார், கார்த்தி. காற்றுவெளியிடையில் ஏற்பட்ட சரிவை, தீரன் அதிகாரம் ஒன்று சரிக்கட்டும் என, நம்புகிறார். இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளாராம், அவர், 1990களில், தமிழகத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக்களம் தயாராகியுள்ளதாம்.
நெசவாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த படம் முழுவதும், பருத்தி ஆடைகளை அணிந்து நடித்துள்ளாராம். 'நெசவாளர்களுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை செய்துள்ளேன்' என்கிறார், அவர். ஸ்பைடர் படத்துக்கு பின், ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தமிழில் வெளியாகும் படம் இது என்பதால், அவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.