இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் நீங்கள் அறிமுகமான படம் எது என நடிகை மெஹ்ரீனிடம் கேட்டால் அவரால் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று சொல்ல முடியாது. இதுவரை இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவில் கூட இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஒரு படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து அப்படத்தின் நீளத்தைக் குறைப்பதாகச் சொல்லி படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவரது மொத்த காட்சிகளையுமே வெட்டி தூக்கி எறிந்த படமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் அமைந்துவிட்டது. இப்பட வெளியீட்டிற்கு முன்பு பத்திரிகையளார்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன், “படத்தில் நாயகி மெஹ்ரீன் வரும் காட்சிகள் அனைத்துமே அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்கும். படத்தில் அந்த காட்சிகள் என்டெர்டெயினிங் ஆக இருக்கும்,” என்றார்.
ஆனால், நேற்று மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தூக்கிய பின் வெளிப்படையாகவே மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது சம்பந்தமாக மெஹ்ரீன் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இயக்குனர் சுசீந்திரன் அவரது அடுத்த படத்திற்காக மெஹ்ரீனை நாயகியாக ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளாராம்.
இதே, ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைத்து இப்படி காட்சிகளை நீக்கியிருந்தால் அந்த நடிகை சும்மா இருந்திருப்பாரா...?.