இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகரும், பிரபல நடிகர் பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நரகாசூரன்' படத்தில் 'லட்சுமன்' என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள படங்களில் இவர் அதிகம் ஏற்று நடித்த போலீஸ் வேடம் தான் இதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தனின் 'சர்வம்' படத்தில் ஆர்யாவின் நண்பராக தலைகாட்டியவருக்கு தமிழில் இது இரண்டாவது படம்..
இந்தப்படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட இந்திரஜித், “நரகாசூரன் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம்.. புதிய சினிமா மொழியில் இதன் கதையும் பட உருவாக்கமும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை பல ஆச்சர்யங்களுக்கு இந்தப்படம் ஆளாக்கும்” என படத்தை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் இந்திரஜித்.