‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரின், சூரி நடித்த படம் நெஞ்சில் துணிவிருந்தால். இமான் இசை அமைத்திருந்தார். கடந்த 10ந் தேதி இந்தப் படம் வெளிவந்தது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தது. படம் நீளம் என்பதும். காதல் காட்சிகள் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதும் பொதுவான விமர்சனமாக இருந்தது. கடும் மழை காரணமாகவும் படத்தின் வசூல் மிகவும் பாதித்தது.
இதனால் படத்தை மறு எடிட் செய்துள்ளார் சசீந்திரன். இதில் ஹீரோயின் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. இடைவேளை பிளாக்கிலும், கிளைமாக்சிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் கூறியதாவது:
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரின் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . என்றார் இயக்குநர் சுசீந்திரன்.