மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' இந்த வாரத்துடன் ஒரு மாதத்தைக் கடக்க உள்ளது. கடந்த வாரம் 9ம் தேதி தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி'யும் வெளியாகி விஜய்யின் முந்தைய டப்பிங் படங்களைக் காட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. முதல் நான்கு நாட்களில் சுமார் 7 கோடி வரை இப்படம் வசூலித்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு உரிமை விலையான 5 கோடியைத் தாண்டி தற்போது லாபத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன் அங்கு டப்பிங் ஆகி வெளியான 'நண்பன்' படத்தின் ரீமேக்கான 'சிநேகிதடு' படம் 10 கோடி வரை வசூலித்து விஜய்யின் தெலுங்கு டப்பிங் படங்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'அதிரிந்தி' விரைவில் முறியடித்துவிடுமாம். இந்த வார முடிவிற்குள் 'மெர்சல்' படத்தின் மொத்த வசூல், தெலுங்கு வசூலையும் சேர்த்து 250 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
'மெர்சல்' படம் தமிழில் மட்டுமே சுமார் 240 கோடி வரையில் வசூலித்திருக்கலாம் என்ற ஒரு தகவலும் உள்ளது. நேற்று கூட தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கியதாம். 'எந்திரன், கபாலி' ஆகிய படங்களின் தமிழ் வசூலுடன் ஒப்பிடும் போது 'மெர்சல்' வசூலே அதிகம் என்கிறார்கள்.