தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அடுத்து வெளிவரும் விஷால் படம் இரும்புத்திரை. பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் சமந்தா, ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜார்ஜ் ஜி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் இசை அமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்து வருகிறார். விஷால் அர்ஜுன் இயக்கிய படங்களில் துணை இயக்கனராக பணியாற்றியவர். இப்போது இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இதுகுறித்து விஷால் கூறியிருப்பதாவது:
என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக இரும்பு திரை படத்தில் நடிக்கிறார். எனக்கு ஊதியம் கொடுத்தவருக்கு நான் ஊதியம் கொடுக்கிறேன். ஆனாலும் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி படமாகி வருகிறது. எங்கள் இணையைக் காண காத்திருங்கள். என்கிறார் விஷால்.