விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. மோகன்ராஜாவின் உதவியாளா ராகேஷ் இயக்கி உள்ளார். துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜே.டி.சக்ரவர்த்தி, சரண்யா, ராதாரவி, நாகிநீடு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சு இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது படத்தை பார்த்த தணிக்கை குழுவினார் படத்துக்கு நிறைய கட்கள் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்தனர். இதை எதிர்த்து படத் தயாரிப்பாளர் படத்தை மறு தணிக்கைக்கு கொண்டு சென்றார். மறு தணிக்கைக்கு பிறகு சில கட்களுடன் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராகேஷ் கூறியதாவது:
காதல், காமம், கற்பழிப்பு, கந்துவட்டி, உரிமை மீறல், வரதட்சணை என பெண்களைச் சுற்றி நிற்கும் சமூகத்தின் வேலிகள் அவ்வளவு சாத்தியமாக்கிவிடவில்லை அவர்களின் சுதந்திரத்தை. வேலையிடங்களில் நேர்கிற பாலியல் ரீதியான தொந்தரவுகள், அவமானத்தைக் கொண்டுவரும் வீடியோக்கள் என அவர்களின் சுதந்திரமும் உரிமையும் ஒருவித பயத்தோடுதான் அனுபவிக்க முடிகிறது. அப்படி அவர்கள் வெளியுலகில் சமூகத்தில் சாதாரணமாக இயங்கும்போது நேரக்கூடிய ஒரு மிக மிக முக்கியமான பிரச்சனையை மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படம் பேசுகிறது.
பெண்களின் அழகு என்பது அவர்களின் நடவடிக்கைகளிலும், ஆளுமையிலும் தான் இருக்கிறது. தவிர, அவர்கள் அணியும் ஆபரணங்களில் அல்ல. அந்த ஆபரணங்களால் பெண்களுக்கு விளைவது தொல்லையே. அதிக நகை என்பது எதிர்காலத்திற்கான சேமிப்பாக இருக்கட்டும். அளவுக்கதிகமான நகையோடும், ஒரேமாதிரியான நடவடிக்கைகளை தினந்தோறும் செய்வதும் பெண்களுக்கான ஆபத்தை வீடுதேடி அழைத்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பை பற்றி வலியுறுத்த எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது .
படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் சென்ஸார் கிடைக்கவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படாதபாடு பட்டபின்னரே யுஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவர்களுக்கு நேரும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம். அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். என்கிறார் ரகேஷ்.