ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதம் கார்த்திக் நடித்த அடல்ட் ஒன்லி படம் ஹர ஹர மகாதேவகி. சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அந்த படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடித்திருந்தார். செப்டம்பர் 29-ந்தேதி ரிலீசான அந்த படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. அதனால் இப்போது மீண்டும் அதே யூனிட் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் இணைகிறது.
ஆனால் ஹர ஹர மகாதேவகி படத்தில் நடித்து அடல்ட் பட நடிகை என்கிற முத்திரையில் விழுந்து விட்ட நிக்கி கல்ராணியோ, தொடர்ந்து அந்த மாதிரி கதையில் நடித்தால் தன்னை ஆபாச பட நடிகையாக்கி விடுவார்கள் என்று இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து ஓட்டம் பிடித்து விட்டார்.
அதனால் அந்த படத்தில் நடிக்க சில நடிகைகளை அழைத்துபோது அடல்ட் படம் என்றதும் நழுவிச்சென்ற நிலையில், சந்தானத்துடன் சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்துள்ள வைபவி சாண்டில்யா கமிட்டாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து இப்போது யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மேலும் இரண்டு நடிகைகளும் தற்போது ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ஆக, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கெளதம் கார்த்திக்குடன் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.