இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், பாறையில் நடந்து வந்தபோது வழுக்கி விழுந்து விட்டதாக செய்தியும், சில போட்டோக்கள் வெளியாகின. அதோடு அவரது காலில் பலத்த அடி பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த போட்டோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் இல்லை நடிகை லிண்டா என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குஞ்சிரமண்டே குப்பயம் -என்ற மலையாள படத்தில் நடித்த போது அப்பட நாயகியான லிண்டாகுமார் என்பவர்தான் பாறையில் வழுக்கி விழுந்து விட்டாராம். அப்போது அவர் தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்தது போன்ற காஸ்டியூமில் இருந்ததால் அவரை கீர்த்தி சுரேஷ் என்று நினைத்து செய்திகள் வெளியாகி விட்டதாக அப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.