‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அப்பாவைக் கொன்றவர்களை அவரது மகன் பழி வாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள்தான் 'மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள். இது போல இன்னும் பல படங்கள் உள்ளன. 'மூன்று முகம்' படத்தில் அப்பா ரஜினிகாந்த், நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்திலும் அப்பா கமல்ஹாசன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார்.
1982ல் வந்த 'மூன்று முகம்' திரைப்படத்திற்கும், 1989ல் வந்த 'அபூர் சகோதரர்கள்' படத்திற்கும் இடையே கூட ஒரு வரிக் கதையாகப் பார்த்தால் ஒரு ஒற்றுமை உண்டு. போலீஸ் அதிகாரியான அப்பாவை வில்லன் கொன்றதால் அவருடைய மகன்கள் வில்லனைப் பழி வாங்குவதுதான் இரண்டு படங்களுக்கும் பொதுவான கதை.
'மெர்சல்' படம் வந்த போது அதை 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் தழுவல் என்று சொன்னவர்கள்தான் அதிகம். யாரும் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் அதில் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது 'மெர்சல்' படத்தில் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் இருக்கிறது என 'மூன்று முகம்' படத்தை ரீமேக் செய்ய உரிமை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இதனால், அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
முன்னர் வந்த தமிழ்ப் படத்தைத் தழுவி படம் எடுத்திருக்கிறார் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் சரி. அப்படியே ஹாலிவுட் படத்தைத் தழுவி படம் எடுத்தவர்களுக்கும், அடுத்தவர் கதையைத் திருடிப் படம் எடுத்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார்களா ?.