'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக 'சாலக்குடிக்காரன் சங்கதி' என்கிற படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் வினயன். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஜோஸ் தாமஸ் என்பவர் கலந்து கொண்டதுடன் இயக்குனர் வினயனிடம் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். காரணம் வினயன் மீது மலையாள இயக்குனர் சங்கம் விதித்துள்ள மறைமுக தடையை தானும் ஆதரித்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார் ஜோஸ் தாமஸ்..
இந்த நிகழ்வில் பேசிய வினயன், இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இயக்குனர் உன்னிகிருஷ்ணன், தான் இயக்கவுள்ள இந்தப்படத்தையும் தடுக்க முயற்சி எடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். மோகன்லால் - விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வில்லன் படத்தை இயக்கியவர் தான் இந்த உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.