ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெட்டைச்சுழி படத்தில் அறிமுகமான ஆரி, அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மௌனவலை என்ற படத்தில் நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இதில் ஆரி ஜோடியாக ஸ்மிருதி நடிக்கிறார். இவர்கள் தவிர மதுசூதனன், ஹரிஷ்பேடி, அருள்ஜோதி, உபாசனா உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ராஜசேகர் தயாரிக்கிறார், பாருக்பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். களம் படத்தை இயக்கிய ராபர்ட் இயக்குகிறார்.
படம் பற்றி ஆரி கூறியதாவது: மாயா படத்திற்கு பிறகு நான் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மற்ற படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். துடிப்பான ஒரு இளைஞன் வாழ்க்கையில் வேலை, காதல் என்று சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் அவனை அறியாமலேயே அவனைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுகிறது. அந்த வலை முற்றிலும் அவனை சுற்றியபிறகுதான் அவனுக்கு விஷயமே தெரிய வருகிறது. அதிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்கிறார் ஆரி.