டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'ஸ்பைடர்' படத்தின் எதிர்பாராத தோல்வி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை மிகவும் பாதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் அடுத்து விஜய் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்காக புதிய தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்ய அவர் முடிவெடுத்துள்ளாராம்.
'ஸ்பைடர்' படத்தின் பாடல்கள் ஹிட் ஆகாத காரணத்தால் கண்டிப்பாக அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை இல்லை என்கிறார்கள். அதே சமயம் அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்யலாம் என்றார்கள். ஆனால், அவரும் இரண்டு பெரிய தெலுங்குப் படங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் பிஸியாக இருக்கிறார். எனவே, வளர்ந்து வரும் இசையமைப்பாளரான 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம்-ஐ ஒப்பந்தம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
'மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை என்பதால் அதிலும் விவாதம் நீடிக்கிறதாம். அடுத்து நாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வது என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது. முதலில் 'ஸ்பைடர்' நாயகி ரகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்றார்கள். ஆனால், 'ஸ்பைடர்' தோல்வியால் ரகுல் ப்ரீத்தும் இருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
'ஸ்பைடர்' படத் தோல்வியால் கதை விவாதத்தை இன்னும் இரண்டு மாதங்கள் வரை நடத்த முடிவெடுத்துள்ளார்களாம். எப்படியம் ஜனவரி 2018ல்தான் படப்பிடிப்புக்குப் போக உள்ளார்கள். அதற்குள் பல மாற்றங்கள் வரலாம் என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன.