டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தை திட்டமிட்டு படமாக்காமல், சகட்டுமேனிக்கு படமாக்கிவிட்டு கடைசியில் எடிட்டிங்கில் திணறிப்போகிறார்கள் இயக்குநர்கள். சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்கும்போதே இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், ஏஏஏ படம் படு தோல்வியடைந்ததால் ஏஏஏ-2 படம் ட்ராப்பானது.
அதேபோல் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படம் பைனல் புட்டேஜ் நாலரை மணி நேரப்படமாக இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டிருக்கிறார். இதேபோல் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் கௌதம் மேனன் அப்படத்தை எடிட் செய்து பார்த்தபோது இரண்டரை மணி நேரத்தில் கதையைச் சொல்ல முடியாது என்பது தெரிந்து புதிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி பாணியில் தொடர்ச்சியாக 3 பாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தின் முதல் பாகத்தில் இப்படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியோடு முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.