‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை அமலா பால் மீது கடந்த சில நாட்களாக புதிய கார் வாங்கியதில் அவர் தவறான முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு வெளியானது. அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும் தவறான முகவரி கொடுத்து அவரும் சட்டத்தை மீறியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
இருவரும் கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரி முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றம் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகை அமலா பால் இதுவரை எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார். சற்று முன் அவருடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “சட்டத்தை மீறும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை, எனது நலன் விரும்பிகளிடம் இரண்டு முறை விசாரித்துவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நகர வாழ்க்கையிலிருந்தும், தேவையில்லாத யூகங்களிலிருந்தும், ஓட வேண்டும் என சில நேரங்களில் நினைப்பதுண்டு,” என்றும் கூறியிருக்கிறார்.