வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் மெர்சல். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றதால் படம் திரைக்கு வந்தபோது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதையடுத்து விஜய்யின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு அவர் மீது மதச்சாயமும் பூசப்பட்டது. பின்னர் அவரும் தான் வெளியிட்ட அறிக்கையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படியாக ஒரு பத்து நாட்களாக மெர்சலுக்கு எதிர்ப்பு அலையடித்து பின்னர் ஓய்ந்தது. இதன்காரணமாக மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரின்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் படத்தை வெளியிட தயாரானார்கள்.
ஆனால், தெலுங்கு பதிப்பிற்கான சென்சார் சான்று முடிவடையவில்லை. இதன்காரணமாக அதிரின்டியை ரிலீஸ் பண்ணயிருந்தவர்களும், ஒரு சிறிய கேப் கொடுத்து விட்டு சான்றிதழ் வந்த பிறகு படத்தை வெளியிடுவது குறித்து முடிவு செய்யலாம் என்று தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.