தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் செப்டம்பர் மாதம் வெளியான படம் 'ஸ்படைர்'. இப்படம் இரண்டு மொழிகளிலும் தோல்வியுற்றதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவித்தார்கள். ஆனால், தயாரிப்பு தரப்பில் 150 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவித்துள்ளார்கள்.
'ஸ்பைடர்' பட தோல்விக்கு சோஷியல் மீடியாக்களில் படம் பற்றிய பல தவறான, எதிர்மறையான செய்திகளை மகேஷ் பாபுவுக்குப் போட்டியாக விளங்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் பரப்பி விட்டுள்ளனர். படத்தின் அமெரிக்கா பிரிமீயர் முடிந்த உடனேயே ஒரு தெலுங்கு ஹீரோவின் பிஆர்ஓ, மகேஷ் பாபுவின் ரசிகர்களை எரிச்சலூட்டும் விதத்தில் படம் பற்றி டுவீட் செய்திருந்தாராம்.
இந்த சோஷியல் மீடியா தாக்குதலை சமாளிக்க மகேஷ் பாபு, தற்போது அவருக்கென தனியாக சோஷியல் மீடியா குழு ஒன்றை நியமித்துள்ளாராம். இனி, சோஷியல் மீடியாக்களில் வரும் எதிர்ப்புகளை அந்தக் குழுவைக் கொண்டு சமாளிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
ஒரு படத்தை ஓட வைக்க எப்படிப்பட்ட போட்டிகளை எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.