'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நிலவேம்பு கஷாயம் விஷயத்தில் கருத்து பதிவிட்ட கமல் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என காவல் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தலை தூக்கி உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நிலவேம்பு கஷாயத்தை தமிழக அரசே பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நிலவேம்பு கஷாயத்தால் சில பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியாக, ஆய்வு முடிவுகள் வரும் வரை நிலவேம்பு கஷாயத்தை வழங்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் கமல்.
நிலவேம்பு தொடர்பாக கமல், பொய்யான தகவலை, மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் பரப்பி வருகின்றார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவராஜன் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கமல் மீது வழக்கு பதிவு செய்யலாமா என தமிழக காவல் துறை ஆலோசனை நடத்தியது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.