டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானால் படங்களின் வசூல் பாதிக்கும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆனால், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள நா பேரு சூர்யா படமும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள பாரத் அனே நேனு என்ற இரண்டு படங்களும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலர் அல்லு அர்ஜூனை அணுகி, ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று அவர் நடித்த படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் அதற்கு, நா பேரு சூர்யா படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வெளியிடுவதாக முதலில் நாங்கள் தான் அறிவித்தோம். ஆனால் இப்போது திடீரென்று மகேஷ்பாபு படக்குழுவினர் அதே தேதியை அறிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அறிவித்ததை அடுத்து நாங்கள் பின்வாங்கினால் அந்த படத்தைப்பார்த்து பயந்து விட்டது போலாகி விடும். அதனால் திட்டமிட்டபடி அதேநாளில் நான் நடித்த, நா பேரு சூர்யா படமும் திரைக்கு வரும் என்று உறுதிபட கூறிவிட்டாராம் அல்லுஅர்ஜூன்.