டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சந்தானம் ஹீரோவாக நடித்து முடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. வைபவி சாண்டல்யா என்ற மராட்டி நடிகை ஹீரோயின். இவர்கள் தவிர சம்பத், விடிவி.கணேஷ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சிம்பு இசை அமைத்திருக்கிறார் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜி.எல்.சேதுராமன் கூறியதாவது:
சந்தானமும் நானும் லொள்ளு சபா காலத்திலிருந்தே நண்பர்கள். அவருக்காகவே நான் எழுதிய கதைதான் சக்க போடு போடு ராஜா. கதைப்படி சந்தானம் ஒரு பெரிய கோடீஸ்வரன் வீட்டு வாரிசு. தந்தைக்கு பிறகு கோடிக்கணக்கான சொத்துகளை அவர்தான் நிர்வகிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருத்தர் தன் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்று வருகிறபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு இறங்கி அடிப்பார். நட்புக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்பதுதான் படம் சொல்லுகிற செய்தி.
சந்தானம் முதலில் எல்லா பிரச்சினைகளையும் தனது புத்தியை கொண்டு தீர்த்து வைக்க நினைப்பார். அது முடியாத பட்சத்தில்தான் சக்தியை பிரயோகிப்பார். இதனால் டுவிட்ஸ்டான காட்சிகளும் இருக்கும், அதிரடி ஆக்ஷனும் இருக்கும். சந்தானம் ஏற்கெனவே கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டார். இந்தப் படம் இன்னும் ஒரு படி அவரை உயர்த்தி விடும் என்கிறார் சேதுராமன்.