பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் இருவரும் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள். இவர்களில் அனுஷ்கா நடித்த ருத்ரம்மா தேவி படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் அல்லு அர்ஜூன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் தமிழில் அறிமுகமானார் மகேஷ்பாபு.
இந்நிலையில், ஸ்பைடர் படத்தை அடுத்து பாரத் அனே நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. அரசியல் கதையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 2018ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். அதே நாளில், அல்லு அர்ஜூன் நடித்து வரும் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா என்ற படமும் இதே வெளியாகிறது. ஆக, மகேஷ்பாபுவும், அல்லு அர்ஜூனும் ஒரே நாளில் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.