'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு எதிர்ப்புக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இப்படத்திற்கு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களால் விஜய் மீது மதுரையில் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில், விஜய் ஒரு தலைவராக உருவாகி, அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். நடிகர் விஜய் ஒரு காந்தியவாதி. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் பேசவில்லை.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அரசியலுக்கு வருவது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.