'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் மகாநதி படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், துல்கர்சல்மான் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்க, துல்கர்சல்மான் ஜெமினிகணேசன் வேடத்தில் நடிக்கிறார். சமந்தா நிருபர் வேடத்தில் நடிக்க, பிரகாஷ்ராஜ் கதை வசனகார்த்தாவாக நடிக்கிறார். இந்நிலையில், மோகன்பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக, மோகன்பாபு, கீர்த்தி சுரேஷின் அப்பா வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.