தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளிக்கு எந்தப் படம் வெளிவரும் என்பது அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை தெரியாமலே இருந்தது. 'மெர்சல்' படம் தணிக்கைப் பிரச்சனையில் சிக்கியதால் எப்படியும் வராது என்று முடிவெடுத்து 'மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்களை திடீரென தீபாவளிப் போட்டியில் இறக்கிவிட்டார்கள்.
'மெர்சல்' படம் வெளிவந்த மறுநாளே 'ஜிஎஸ்டி' சர்ச்சையில் சிக்கி படத்திற்கு அமோகமான விளம்பரம் கிடைத்து நாளை வரை பெரும்பாலான தியேட்டர்களில் படம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்னதான் அந்த வசனத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள மக்களின் முதல் சாய்ஸ் ஆக 'மெர்சல்' படம்தான் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் 'மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்கள் இருக்கின்றன.
'மெர்சல்' புயலில் இருந்து தங்களது படத்தைக் காப்பாற்றிக் கொள்ள 'மேயாத மான்' குழுவினர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் படத்தைப் பற்றி கருத்தைக் கேட்டு பகிர்ந்து வருகிறார்கள். படத்தைப் பாராட்டி தனுஷ் டிவீட் செய்துள்ளார். இது போல மேலும் சில பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகிறார்கள். இதைக் கூட 'சென்னையில் ஒரு நாள் 2' குழு செய்யவில்லை.
'மெர்சல்' எப்படியும் நாளைய வசூலுக்குள் தப்பித்து விடும், 'மேயாத மான்' அடுத்த வாரமும் ஓடினால் வசூலைப் பெறும் என்றும், 'சென்னையில் ஒரு நாள் 2' படத்திற்குச் சிக்கல்தான் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.