தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடித்த தெறி படத்தை இயக்கியவர் அட்லி. அதையடுத்து மீண்டும் விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள மெர்சல் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. முதல் இரண்டு படங்களில் அடக்கிவாசித்த அட்லி இந்த படத்தில் அதிரடியான ஒரு விசயத்தை கையில் எடுத்து பரபரப்பான இயக்குனராகியிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பேட்டியில் அட்லி கூறும்போது, மெர்சலுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கிறார். அந்த படத்தில் அவர் நடித்து முடிப்பதற்குள் நான் விஜய்க்காக ஒரு கதையை ரெடி பண்ணி விடுவேன். அந்த கதையை அவரிடம் சொல்வேன். அவர் சம்மதித்தால் மீண்டும் அவரை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் அட்லி.