சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம், தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கிவருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவற்றில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பதை இதுவரை வெளியிடவே இல்லை.
இந்த படத்தில் இடம்பெறும் 'மறுவார்த்தை பேசாதே...' என்ற சிங்கிள் டிராக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். அப்போது, அந்த பாடல் எழுதியவர் தாமரை, பாடியவர் சித்ஸ்ரீராம் என்ற தகவலை மட்டும் வெளியிட்டவர்கள், இசை அமைப்பாளர் பெயரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 'மறுவார்த்தை பேசாதே...' பாடலுக்கு இசை அமைத்தவர் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்து வந்தது.
இந்நிலையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனே இசையமைத்துள்ளதாக ஒரு தகவலும், சசிகுமார் நடிப்பில் 'கிடாரி', 'பலே வெள்ளையத் தேவா' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த தர்புகா சிவா இசை அமைத்திருப்பதாக ஒரு தகவலும் வெளியானது.
'எனை நோக்கி பாயும் தோட்டா'விற்கு இசை அமைப்பவர் தர்புக சிவா என்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தர்புக சிவா இசை அமைக்கும் மூன்றாவது படம் இது.
இந்த படம் தவிர 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்துக்கும் தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.