இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் படங்கள் ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அக்டோபர் 18ம் தேதி தீபாவளிக்கு 'மெர்சல்' வெளிவரும் என்று எப்போதே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 40 மணி நேரங்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளதாகத் தெரிகிறது.
விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய பிறகுதான் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் படத்திற்கு சான்றிதழ் வழங்குவார்கள். அடுத்து கேளிக்கை வரி குறைப்பிற்கான அரசாணையும், புதிய டிக்கெட் கட்டணங்கள் குறித்த அரசாணையும் தியேட்டர்காரர்கள் வசம் கிடைத்த பிறகே அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.
இந்த விஷயங்களை அனைத்தும் முடிய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. எப்படியும் இன்று இரவுதான் படத்திற்கான முன்பதிவை பெரும்பாலான தியேட்டர்கள் ஆரம்பிக்க உள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர். தீபாவளி அன்றே படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலில் உள்ள பல ரசிகர்கள் தியேட்டர்கள் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.