ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தானம் ஹீரோவாக நடித்து அடுத்து வெளிவர இருக்கிற படம் சக்க போடு போடுராஜா. காமெடி நடிகர் வி.டி.வி கணேஷ் தயாரித்துள்ளார், வைபவி ஷாண்டில்யா என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர சம்பத், ரோபோ சங்கர், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்பு இசை அமைத்துள்ளார், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் டிரைய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சந்தானம் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவேனா மாட்டேனா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. ஆரியாவுக்கு ரொம்பவே இருந்தது. "மச்சான் நீ வந்திடுவியா... வந்துட்டியா..." என்று கேட்டு கொண்டே இருந்தார். என் மீது அக்கறை கொண்டவர் ஆர்யா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலிருந்து எனக்கு நண்பராக இருக்கிறார். சினிமாவில் நடிப்பது அவருக்கு டைம் பாஸ் மாதிரி, சைக்கிளிங் செல்வது, ஜிம்முக்கு சென்று உடலை பாதுகாப்பாக வைத்து கொள்வதுதான் அவருக்கு பிடிக்கும். அதற்கு செலவிடும் நேரத்தை சினிமாவிற்கு செலவிட்டால் ஆர்யா பாலிவுட் வரைக்கும் சென்றிருப்பார். நானும் ஓரளவுக்கு உடம்பை நன்றாக வைதிருக்கிறேன் என்றால் அதற்கும் ஆர்யாதான் காரணம்.
இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்திருப்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். தயாரிப்பாளர் விடிவி கணேஷ் சிம்புதான் இசை அமைக்க வேண்டும் என்ற சொன்னபோது அவர் வெளி படத்துக்கு இசை அமைக்க மாட்டார் என்று சொன்னேன். ஆனால் சிம்பு எனக்காக இசை அமைக்க ஒத்துக் கொண்டார். சிம்பு இல்லை என்றால் நான் இங்கு இல்லை. அவரை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் எனக்கு அவர்தான் காட் பாதர். இவ்வாறு சந்தானம் பேசினார்.