வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகள் தற்போது 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி கட்டி வருகிறது. தற்போது மாநில அரசு 10 சதவிகித கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் வருகிற 6-ந் தேதி முதல் புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைப்பது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ் திரைப்படத்துறை ஏற்கெனவே திருட்டு விசிடி முதல் சமீபத்தில் விதிக்கப்பட்ட 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு வரை பல்வேறு காரணங்களால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு 10 சதவிகித கேளிக்கை விரி விதித்துள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதனை அரசு ஏற்கவில்லை.
இந்த பிரச்னை தொடர்பாக சங்கத்தின் அவசரக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் வருகிற 6ந் தேதி முதல் புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.