ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதால், இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பார்சிலோனா நாட்டுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள விஜய், முன்னதாகவே தனக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். அதோடு, படத்தின் முதல் பாதியை பின்னணி இசை இல்லாமலேயே பார்த்து விட்டு சென்றாராம்.
அவர் சென்றதை அடுத்து, மெர்சல் முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான் ஒரு வாரமாக இரவு பகல் என்று இடைவிடாமல் பின்னணி இசையமைக்கத் தொடங்கினாராம். அதையடுத்து தற்போது அவர் இரண்டாவது பாதி படத்திற்கான பின்னணி இசையில் பிசியாக இருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் விஜய்யின் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மியூசிக் ட்ராக் உருவாக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த ஒவ்வொரு ட்ராக்கிலும் சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறாராம்.