'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ஸ்பைடர். மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது.
முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மகேஷ் பாபுவுடன் ஒர்க் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக திட்டமிட்டது இப்போது தான் நிறைவேறியுள்ளது. தமிழில் நான் விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி கதையை மகேஷ் பாபுவுக்காகத் தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தார்.
அதையடுத்து அந்த கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே பண்ணி அவரை வைத்து இயக்கினேன். அதோடு, பின்னர் துப்பாக்கியை தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ரீமேக் செய்ய நினைத்தேன். விஜய், தெலுங்கில் டப் செய்து வெளியிடுமாறு கூறியதால், அந்த ரீமேக் திட்டத்தை கைவிட்டு, துப்பாக்கியை டப்பிங் செய்து விஜய் படமாக ஆந்திராவில் வெளியிட்டேன் என்கிறார் முருகதாஸ்.