Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் : விஜய் சேதுபதி

26 செப், 2017 - 14:31 IST
எழுத்தின் அளவு:
Any-one-can-enter-in-Politics-says-Vijaysethupathi

இந்திய ஜனநாயகத்தில் உள்ள அத்தனை பேருக்குமே அரசியலுக்கு வருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் நாட்டுப்பற்றுடன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் நடிகர் விஜயசேதுபதி.

விஜய் சேதுபதி, தான்யா, பசுபதி, பாபி சிம்ஹா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ள படம் கருப்பன். ரேனிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 29-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணி அளவில் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, தான்யா, பன்னீர் செல்வம், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விஜய் சேதுபதி கருப்பன் படம் குறித்து பேசுகையில், கருப்பன் படம் ஒரு கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் காதல் பற்றிய கதை. இந்த படத்தைப்பார்த்தால் அனைவருமே அவரவர் மனைவியை காதலிக்கத் தொடங்கி விடுவார்கள். இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் உள்ளது. அதேசமயம், மெரினா ஜல்லிக்கிட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த படத்தை எடுக்கவில்லை. அந்த போராட்டம் நடந்தபோதே கருப்பன் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்திற்காக பல நடிகைகளை பரிசீலித்து கடைசியாக தான்யாவை புக் பண்ணினோம். ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அதோடு இதுவரை என் படங்கள் பண்டிகை நாட்களில் வெளியாகவில்லை. அந்த குறையை தீர்க்கும் வகையில், சரஸ்வதி பூஜைக்கு இந்த படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் பெட்ரூம் காட்சிகளை கூட அனைவரும் குடும்பத்துடன் பார்க்கு அளவுக்கு படமாக்கியிருக்கிறோம். அதாவது எனது வீட்டில் எனது பிள்ளைகள் முன்பு நானும் என் மனைவியும் எந்த அளவுக்கு நாகரீகமாக இருப்போமோ அந்த அளவுக்கு இந்த படத்தின் காட்சிகள் உள்ளன. அதனால் அனைவரும் குடும்பத்துடன் வந்து இந்த கருப்பன் படத்தை கண்டுகளிக்கலாம். இதையடுத்து நிருபர்களின் கேள்விகளுக்கு விஜய் சேதுபதி பதிலளித்தார்.

விஜய் சேதுபதி என்றால் யதார்த்தமான நடிகர். அதனால் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்துள்ளது. ஆனால் இப்போது கருப்பன் போன்ற மசாலா படங்களில் நடிக்கிறீர்களே?

என்னைப் பொறுத்தவரை ஹீரோவுக்காக படம் ஓடாது. அப்படியே ஓடினாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மட்டும் தான் ஒரு ஓப்பனிங் இருக்கும். அதன்பிறகு கதை சரியில்லை என்றால் படம் ஓடாது. அதனால் எப்போது நான் கதைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். கதை சுவராஸ்யமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் படங்களை ஓகே பண்ணி நடிக்கிறேன். மேலும், ஒரே மாதிரியாக இல்லாமல் எல்லா விதமான கதைகளிலும் நடிக்கவே ஆசைப்படுகிறேன். இவர் இந்த மாதிரியான கதைகளுக்கு மட்டும் தான் பொருந்துவார் என்று என்னைச் சுற்றி வட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை.

கனவுல வர்ற மாதிரி, எனக்கும் ஒரு பத்து பேரை அடிச்சு தூக்கனுங்கிற ஆசை இருக்காதா. அதனால் இந்த மாதிரி படத்திலயும் அவ்வப்போது நடிக்க ஆசைப்படுறேன்.

நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் பண்றீங்களே?
அது நானாக விரும்பி செய்றதில்லை. நண்பர்கள் கேட்கும்போது தவிர்க்க முடியாமல் செய்கிறேன். அன்புத்தொல்லைக்கு அடி பணிஞ்சு தான் ஆகனும். ஆனால் 20 பேர் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தால் ஒரு படத்தில்தான் நடிக்க சம்மதிக்கிறேன். எம் மூஞ்சிய ரசிகர்கள் அடிக்கடி பார்த்தால் போர் அடிச்சிடும்னு எனக்கே தெரியும். ஆனா கேட்க மாட்டாங்கிறாங்க.

ரஜினி-கமல் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி?
இந்திய ஜனநாயகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டுப்பற்றுடன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in