டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி நடித்துள்ள படம் கருப்பன். ஸ்ரீ சாய் பிலிம்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கி உள்ளார். வருகிற 29ந் தேதி படம் வெளிவருகிறது. படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது:
விக்ரம் வேதா வெளிவந்தபோது எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது. காரணம் அந்த கேரக்டரில் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்ற தயக்கம். ஆனால் கருப்பன் படத்தை பொருத்தவரை அந்த தயக்கம் இல்லை. காரணம் இது நம் மண் சார்ந்த கதை. ஒரு பெஸ்டிவல் மூட் உள்ள கதை. இந்தப் படம் எப்படியும் வெற்றி பெறும் என்பது தெரியும். அந்த நம்பிக்கையில்தான் குறுகிய காலத்தில் இதனை வெளியிடுகிறாம். இதில் நான் மாடுபிடி வீரனாக நடித்திருக்கிறேன். கணவன், மனைவிக்கு இடையிலான அன்பை சொல்கிற படம். என்றார்.
"இன்றைக்கு மத்திய அரசு நீட் தேர்வு, நவோதயா பள்ளி என்று தமிழக அரசு மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதனை பெற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி.
"இது கொஞ்சம் அட்வான்சான கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். நீட் தேர்வால் ஒரு உயிரை பறிகொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் எனக்கு விருது அறிவிக்கப்பட்டால் அதை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன். விருதை விட என் மக்களின் உணர்வே எனக்கு முக்கியம்" என்றார்.