மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சி.சத்யா. அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, ஆகிய படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது பக்கா, அரசுர குலம் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சத்யா இசை அமைக்கும் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டாகிறது. ஆனாலும் வர் விஜய், அஜீத் மாதிரி பெரிய படங்களுக்கு ஏன் இசை அமைப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
நான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். வேறு ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு தயக்கம் இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன்.
இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது. இனி பெரிய ஹீªரோக்களின் படங்களில் என்னை பார்க்கலாம். என்கிறார் சத்யா.