ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தொடர்ந்து படம் இயக்காமல் அதன்பிறகு அவரும் நாயகனாகி விட்டார். பல படங்களில் தன்னைத்தானே இயக்கிக்கொண்டார். ஆனால் இசை படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுநேர நடிகராகி விட்டார். அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த இறைவி பட வாய்ப்புதான். அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை திருப்பியவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகியிருக்கிறார்.
அதேபோல் தமிழில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு, அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடித்துள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா-விஜய் இடையேயான கிளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்களாக படமாக்கினாராம் அட்லீ. அத்தனை நாளும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாமல் நடித்தாராம் எஸ்.ஜே.சூர்யா. அதைப்பார்த்து அசந்து போன விஜய், ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை மனதார பாராட்டியிருக்கிறார். இதேப்போன்று பல காட்சிகளில் சூர்யாவின் நடிப்பை மனதார பாராட்டியிருக்கிறார் விஜய்.