பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படங்கள். சரித்திர கதையில் உருவான இந்த படங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தன. இப்படத்தின் மூலம் இந்திய படங்களுக்கான சர்வதேச சந்தை மேலும் அதிகமாகியிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ராஜமவுலி எந்த மாதிரியான படத்தை இயக்க போகிறார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து இன்னொரு பாகுபலி படத்தை வெளியிடும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக தற்போது டோலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது. அதாவது, பாகுபலி இரண்டு பாகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை மட்டுமே இணைத்து விட்டு, மற்ற காட்சிகளை எடிட் செய்யப்போகிறாராம். அந்த வகையில், புதிய பாகுபலி படத்தை 3 மணி நேரம் அளவு கொண்டதாக வெளியிடப்போகிறாராம் ராஜமவுலி.