ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியல் தொடர்பான விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழக அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ள கமல், டுவிட்டரிலும் தான் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டதாக அதிரடியான டுவீட்டுகளை அவ்வப்போது போட்டு வருகிறார்.
விரைவில் அரசியலிலும் களமிறங்க உள்ளார் கமல். அதன்வெளிப்பாடாக கமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நக்மா(காங்கிரஸ்), உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசினர். சமீபத்தில் கூட கமல், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இன்று(செப்.,21) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடந்தது. பின்னர் கமல்-கெஜ்ரிவால் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
கமல் பேசுகையில், கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் என்ன மாதிரி பேசியிருப்போம் என்று நீங்கள் உணருவீர்கள். ஊழலுக்கு எதிர்ப்பாளராக இருக்கும் அனைவரும் என் உறவினர்கள் தான். அந்த வகையில் எனது இந்த உறவு தொடருகிறது. எனது தந்தை காலம் முதலே எனக்கும், இந்த வீட்டிற்கும் அரசியல் தொடர்பு உள்ளது. பல விஷயங்கள் விவாதித்தோம், இனியும் விவாதிப்போம் என்றார்.
கெஜ்ரிவால் பேசும்போது, நடிகர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு நானும் மிகப்பெரிய ரசிகன். நாடு தற்போது உள்ள சூழலில் நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றும் சேரும் நேரம் வந்துள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் மதவாதத்திற்கு எதிரானவர்களாக உள்ளனர் என்றார்.
முன்னதாக சென்னைக்கு விமானம் மூலம் வந்த கெஜ்ரிவாலை, கமலின் இளைய மகள், அக்ஷ்ராஹாசன் விமானநிலையத்திற்கே நேரடியாக சென்று வரவேற்றார்.