தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் மணி மண்டபம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தியது. இதனால் சிவாஜி மணி மண்டபத்தை அரசே கட்டும் என்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி கடந்த மே மாதம் நிறைவடைந்தது.
சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் சிவாஜி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு மணி மண்படத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு நிறுப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஆனால் மணி மண்டபம் திறப்பு குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வருகிற அக்டோபர் 1ந் தேதி சிவாஜியின் 90-வது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்போ மணி மண்டபத்தை திறக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது: நடிகர் திலகத்தின் மணி மண்பட பணிகள் முடிந்து விட்டது. அப்படி இருந்தும் அரசு அதை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பிறந்த நாள் அன்றோ அதற்கு முன்போ மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கடிதம் எழுதினேன், அதற்கு பதில் இல்லை. முறையான அறிவிப்பு வெளியிடாவிட்டால் நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன் என்கிறார். சிவாஜி மணி மண்படத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.