திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரதமர் மோடி முழுவீச்சில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று இந்தியா முழுக்க தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டால், பொது மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்பதால், தென்னிந்தியாவைச்சேர்ந்த சில முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அந்த வகையில் மலையாள நடிகர் மோகன்லால்க்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், மகேஷ்பாபு, மோகன்பாபு, டைரக்டர் ராஜமவுலி ஆகியோருக்கும் இந்த தூய்மை இந்தியா பிரச்சாரத்தில கலந்து கொள்ள அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர் மோடி. அதோடு, தூய்மையான இந்தியா என்பது ஏழைகளுக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் நாம் செய்கிற புனித சேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.