இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் படங்களை இயக்கியவர் சரண். இடையில் ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதய திருடன், வட்டாரம், மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்வியால் அடுத்த வாய்ப்பின்றி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார்.
இதில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார், கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் இந்தப் படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் அதனை வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண். வருகிற 22ந் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.