மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றிய பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. காற்று வெளியிடை தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் இயக்க இருக்கிறார் மணிரத்னம். ஏற்கெனவே அவர் தயார் செய்து வைத்திருந்த ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போது படமாக இயக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிரத்னம் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.