மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் கம்பீரம், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பிரணதி. மலையாளத்தில் பார் தி பீப்பிள், 4 ஸ்டூடன்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத பிரணதி சென்னையில் வசித்து வருகிறார்.
கேரள மாநிலம் தலச்சேரி அவரது சொந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் பிரணதியின் தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்க்க அங்கு சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரணதியின் தாய் மாமன் அரவிந்த் பிரணதியின் வீட்டுக்கு சென்று அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து பிரணதி தலசேரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தாய்மாமன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரணநிதிக்கும், அவரது தாய்மாமன் அரவிந்துக்கும் இடையில் தலசேரியில் உள்ள பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதையொட்டியே அரவிந்த் பிரணதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"கொஞ்ச நாட்களாகவே அரவிந்த் என்னை மிரட்டி வருகிறார். நான் இங்கு வந்ததும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் எனது நெருங்கிய உறவினர்தான் என்றாலும் வேறு வழியில்லாமல்தான் போலீசில் புகார் கூறினேன்" என்கிறார் பிரணதி.