தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அது திரையரங்கில் விற்கப்படும் சினிமா டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தனியாக ஒதுக்கப்பட்டு அது விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தனது துப்பறிவாளன் படத்தில் இந்த திட்டத்தை அவர் செயல்படுத்துகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
துப்பறிவாளன் படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும். தமிழ் நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.