'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'புக்ரி' படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயசூர்யா தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற படம் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் சவுண்ட் எஞ்சினியராக ஜஸ்டின் ஜோஸ் என்பவர் பணியாற்றுகிறார்.. இவர் தான் பிரமாண்ட 'பாகுபலி' படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் பண்ணியவர். அதுமட்டுமல்ல பாஜிராவ் மஸ்தானி' படத்தின் சவுண்ட் மிக்சிங்கிற்காக தேசிய விருதும் பெற்றவர்.. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே இந்தப்படத்தின் முதல் பாகமான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.