பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வின் காரணமாக நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு திரைத்துறையினர் அனுதாபத்தையும், அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதற்கான காசோலையை ராகவா லாரன்சின் உதவியாளர்கள், அனிதாவின் வீட்டுக்குச் சென்று கொடுத்து வந்துள்ளனர். இதனை ராகவா லாரன்ஸ் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று ராகவே லாரன்ஸ் கூறியுள்ளதாக தெரிகிறது. அரசு கொடுத்த நிதியை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.